ஆன்மிகம்

ருது தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்

Published On 2018-09-11 08:24 GMT   |   Update On 2018-09-11 08:24 GMT
ருது தோஷம் பெற்றவர்கள் அந்த நட்சத்திரங்களுக்குரிய அதிதேவதைகளை அறிந்து பரிகாரம் செய்தால், வருங்கால வாழ்க்கையில் கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாது.
செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் ருதுவானால் அதை 'தோஷம்' என்று கருத வேண்டாம்.

ஆனால் அந்தக் கிழமைகளில் திருவாதிரை, பரணி, புனர்பூசம், கார்த்திகை, பூரம், கேட்டை, மகம் ஆகிய நட்சத்திரங்கள் இணையும் பொழுது ஒரு பெண் ருதுவானால் அது 'ருது தோஷம்' என்று சொல்வார்கள்.

ருது தோஷம் பெற்றவர்கள் அந்த நட்சத்திரங்களுக்குரிய அதிதேவதைகளை அறிந்து பரிகாரம் செய்தால், வருங்கால வாழ்க்கையில் கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாது.

ருது ஜாதகம் கணித்து அதன் கிரக நிலைகளுக்கேற்ப பரிகாரங்களைச் செய்து பலன்பெறலாம்.

Tags:    

Similar News