ஆன்மிகம்
திருமணம் தடைகள், தாமதங்கள், இடையூறுகள் ஏற்படுபவர்கள் கருட பகவானுக்கு அபிஷேகம் செய்ய, திருமணத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
திருமணம் கைகூட தடைகள், தாமதங்கள், இடையூறுகள் ஏற்படுபவர்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்றோ அல்லது சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதி வரும் நாளிலோ கருட பகவானுக்கு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனை, செய்ய, திருமணத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி விரைவில் மிகச் சிறப்பாக திருமணம் நடந்து புத்திரப்பேறும் சித்திக்கும் கருட வழிபாட்டுடன் கருட தரிசனம் செய்ய வேண்டும். தரிசனம் கிடைத்துவிட்டால் பலன் உறுதியாகும்.
திருமண விஷயத்தில் கருடன்
திருமண சம்பந்தமாகப் பெண் பார்க்கவோ, அல்லது மாப்பிள்ளை பார்க்கவோ புறப்பட்டு போகும் போது கருட தரிசனம் கிடைத்தால் திருமணம் நடக்கும். அந்த தம்பதிகள் ஆண், பெண் குழந்தைகளுடன் சீரும் சிறப்பான, சகல வசதி வாய்ப்புகளுடனும் நன்றாக இல்லற வாழ்க்கையை வாழ்வார்கள். வாழ்வின் எவ்வித குறையும் ஏற்படாது.
திருமண விஷயத்தில் கருடன்
திருமண சம்பந்தமாகப் பெண் பார்க்கவோ, அல்லது மாப்பிள்ளை பார்க்கவோ புறப்பட்டு போகும் போது கருட தரிசனம் கிடைத்தால் திருமணம் நடக்கும். அந்த தம்பதிகள் ஆண், பெண் குழந்தைகளுடன் சீரும் சிறப்பான, சகல வசதி வாய்ப்புகளுடனும் நன்றாக இல்லற வாழ்க்கையை வாழ்வார்கள். வாழ்வின் எவ்வித குறையும் ஏற்படாது.