உள்ளூர் செய்திகள்
கார்மல் நகர் திருக்குடும்ப ஆலயம்

கார்மல் நகர் திருக்குடும்ப ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2021-12-24 07:52 IST   |   Update On 2021-12-24 07:52:00 IST
ராமன்புதூர் கார்மல் நகர் திருக்குடும்ப ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில், ராமன்புதூர் கார்மல் நகரில் திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை திருப்பலியும், மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும் நடைபெறும்.

தொடர்ந்து 6.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. ஆலஞ்சி பங்குதந்தை மரிய சூசை வின்சென்ட் கொடியை அர்ச்சித்து ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்குகிறார். தேவசகாயம் மவுண்ட், மறைவட்ட முதல்வர் அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் மறையுரையாற்றுகிறார்.

இரவு 11 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெறும்.

25-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது.

26-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். அன்று காலை முதல் மாலை வரை நற்கருணை ஆராதனை நடக்கிறது. மாலையில் 6 மணிக்கு ஜெபமாலையும், 6.30 மணிக்கு திருப்பலியும் நடைபெறும்.

27-ந் தேதி காலை 6.30 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. 28-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலி, மதியம் 12 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 6.30 மணிக்கு திருப்பலி, மறையுரை ஆகியவை நடக்கிறது.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை போன்றவையும் நடக்கிறது.

வருகிற 31-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சிறப்பு நன்றி வழிபாடும், 11.30 மணிக்கு புத்தாண்டு திருப்பலியும் நடைபெறும். ஜனவரி 1-ந் தேதி காலை மற்றும் மாலையில் திருப்பலியும், இரவு 9 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது.

விழாவின் இறுதி நாளான 2-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருக்குடும்ப ஆலய திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் ஜான் பெனிட்டோ தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சகாய ஆனந்த் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 2 மணிக்கு தேர்ப்பவனியும், மாலை 6 மணிக்கு திருப்பலி, கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சகாய பிரபு, கார்மல் நகர் பங்கு தலைவர் ஜோசப் ஆன்றனி, செயலாளர் டூரிங் ஆன்றனி தனிஷ், பொருளாளர் லியோன் ஜேசுரெத்னம் ஆகியோரின் வழிகாட்டுதலில் பங்கு செயற்குழு உறுப்பினர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Similar News