ஆன்மிகம்
இயேசுவின் சிலுவை மொழிகள்

இயேசுவின் சிலுவை- எழுச்சியின் முன் உதாரணம்

Published On 2020-10-17 07:32 GMT   |   Update On 2020-10-17 07:32 GMT
இயேசு நமது குற்றங்களுக்காக, பாவங்களுக்காக தன்னையே இழந்தார். இயேசுவின் கல்வாரிப் பயணம், வீழ்ச்சியின் அடையாளம் அல்ல, வாழ்வு தரும் எழுச்சியின் முன் உதாரணம்.
ஓர் இளைஞன் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி வீட்டுக்கு வந்தான். காவல்துறையினர் அவனை துரத்தினர். இதை கண்ட அண்ணன் தம்பியின் இரத்தக்கறை படிந்த ஆடையை கழற்றி, தான் அதை உடுத்திக்கொண்டான். அண்ணனின் உடையில் இரத்தக்கறையைப் பார்த்த காவல் அதிகாரி அண்ணனைக் கைது செய்து முடிவில் தூக்கு தண்டனைக்கு அழைத்து சென்றனர். தூக்கில் தொங்கும் முன் தூர நின்றுகொண்டிருந்த தன் தம்பியைப் பார்த்த அண்ணன் 'நீ இனிமேல் நீதிமான். பரிசுத்த வாழ்வை கற்றுக்கொள்" என்றான்.

தம்பியின் குற்றத்தை அண்ணன் ஏற்றுக்கொண்டது போல இயேசு நமது குற்றங்களுக்காக, பாவங்களுக்காக தன்னையே இழந்தார். இயேசுவின் கல்வாரிப் பயணம், வீழ்ச்சியின் அடையாளம் அல்ல, வாழ்வு தரும் எழுச்சியின் முன் உதாரணம். இயேசுவின் சிலுவைப் பயணம் கோழைத்தனத்தின் வெளிப்பாடல்ல, மாறாக வீரத்தின் அடையாளம். இயேசுவின் சிலுவை நமக்கு சோகத்தை உருவாக்குகின்றது என்று நினைக்காமல், தீமைக்கு எதிராகப் போராடத் தூண்டுவதாக அமைய வேண்டும். சிலுவை துன்பத்தின் அடையாளம் என்று மட்டும் பார்க்காமல், பகிர்வின், மன்னிப்பின், புதுவாழ்வின் அடையாளம் என்பதை உணரவேண்டும்.

"நீதிமான்களின் வாழ்வில் நீதிபிறக்கின்றது.
போராளியின் சாவில் போராட்டம் பிறக்கின்றது
இலட்சியவாதியின் சாவில் இலட்சியம்
வலுப்பெறுகிறது.
Tags:    

Similar News