ஆன்மிகம்
நற்செய்தி சிந்தனை: பேராசை வேண்டாம்
நற்செய்தியை படிக்கும் நாம், படித்ததோடு மட்டும் இருந்து விடாமல், நற்செய்தியின் பொருளை உணர வேண்டும். பின்னர் அது பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
அந்த காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர், இயேசு பிரானைப் பார்த்து, “போதகரே! சொத்தை என்னுடன் பங்கு போட்டுக் கொள்ளுமாறு, என்னுடைய சகோதரனுக்குச் சொல்லும்” என்று கூறினார்.
உடனே இயேசு பிரான் கேட்டவரை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ, பாகத்தைப் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யாரெனக் கூற முடியுமா?” என்று கேட்டார். பிறகு அவர்களைப் பார்த்து, “எவ்வகையான பேராசைக்கும் இடம் கொடுக்காமல், மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். அதிகமான உடைமைகளை வைத்திருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்து விடாது” என்று கூறினார்.
எப்பொழுதும் எளிமையான உவமைகளைச் சொல்லி, மக்களை நெறிப்படுத்திய இயேசு பிரான், இவ்விடத்திலும் அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்.
“செல்வந்தராய் இருந்த ஒருவனுடைய நிலம், நன்றாக.. மிகுதியாக விளைந்தது. அவன் அந்த விளைச்சலைப் பார்த்து விட்டு, ‘நான் என்ன செய்வேன்? அதிகமாக விளைந்து விட்டதே! என்னுடைய விளை பொருட்களைச் சேர்த்து வைக்க இடம் இல்லையே!’ என்று எண்ணினான். உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“என் களஞ்சியங்கள் அனைத்தையும் இடித்து விட்டு, இன்னும் மிகப் பெரிதாகக் கட்டி விடுவேன். அங்கு கொண்டு போய், எனது தானியங்களையும் பொருட்களையும் சேர்த்து வைப்பேன்.” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
பின்பு நெஞ்சை நோக்கி, “என் நெஞ்சமே! உனக்குப் பல ஆண்டுகளுக்கு வேண்டிய, பல வகையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இனி நீ ஓய்வு எடுத்துக்கொள். நன்றாக உண்டு, குடித்து, மகிழ்ச்சியில் ஆடு. கும்மாளம் போடு எனச் சொல்வேன்” என்றான்.
ஆனால் கடவுளோ அவனை நோக்கி, “அறிவு கெட்டவனே! இன்று இரவே உனது உயிரானது, உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்படிப் பிரிந்த பிறகு, நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாக இருக்கும்” என்று கேட்டார்.
இதோடு இயேசு பெருமான் நிறுத்தி விட்டு, “கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய், தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே” என்றக் கருத்தை வெளிப்படுத்தினார்.
இந்நற்செய்தியை, உலகில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதரும், மிகவும் ஆழமாகப் படித்துத் தெளிவடைய வேண்டும்.
போதகரிடம் அவன் முதலில் கேட்டது, அறியாமையின் வெளிப்பாடாகும். ஒருவர் சொத்தை, ஒருவருக்குப் பங்கிட்டுக் கொடுக்கவா, இயேசு பிரான் இவ்வுலகத்திற்கு வந்தார்? அவர் மக்களை நெறிப்படுத்த வந்தவர் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை.
அறியாமை காரணமாக, நாமும் எவ்வளவோ பேச்சுகளை பேசி விடுகிறோம். எல்லோரையும் சாதாரணமாக எண்ணி விடுகிறோம்.
முதலில் இயேசுபிரான், அவனிடம் சாதாரணமாகப் பேசுகிறார். “உங்களுக்கு நடுவராகவோ, பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியது யார்?” என்ற வினாவைத் தொடுக்கிறார்.
முதல் கேள்வியிலேயே அவன் சிந்தித்திருக்க வேண்டும். சிந்திக்காமல் இருந்ததால்தான், அவன் இப்படிச் சொல்லி விட்டான் என்பதை இயேசு அறிந்து கொண்டார். அதனால் தான் அடுத்து வினா தொடுக்காமல், ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்.
“எவ்விதமான பேராசைக்கும் இடம் கொடுக்காமல் எச்சரிக்கையாக இருங்கள். அதிகமான உடைமைகளைக் கொண்டிருப்பதால், ஒருவருக்கு வாழ்வு வந்து விடாது” என்ற கருத்தை அங்கு பதிய வைக்கிறார். அப்பொழுதாவது அவன் உணர்ந்திருப்பானா? என்றால், ‘இல்லை’ என்றுதான் தோன்றுகிறது.
காரணம், இவ்வுலகத்தைப் பற்றியும், இவ்வுலக சொத்துகளைப் பற்றியும் கவலைப்படுகின்ற ஒருவன், இப்படியெல்லாம் சிந்திக்க முடியாதல்லவா? இவற்றையெல்லாம் அறிந்தவர்தான் இயேசு பிரான். இருந்தாலும் வழக்கம்போல், அவருக்கே உரிய பாணியில், எளிமையாக ஓர் உவமையை எடுத் துரைக்கத் தொடங்குகிறார்.
செல்வந்தன் ஒருவரிடம் இருந்து தொடங்குகிறார். செல்வம் பற்றிப் பேசுகிறார். களஞ்சியம் பற்றி விரித்துரைக்கிறார். செல்வந்தனுடைய எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.
அடேயப்பா! அவன் மனம் எப்படியெல்லாம் பேசுகிறது? ஏ! மனமே! நீ, நன்றாக ஓய்வு எடு. நன்றாக உண். நன்றாகக் குடி. குதூகலமாக ஆடு. என்றெல்லாம் எண்ணுவதைக் கவனிக்கிறார்.
இறுதியில், கடவுள் சொல்லும் ஒரு வார்த்தையில் எண்ணங்கள் தவிடு பொடியாகிறது.
‘இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவைகள்’
இது அவனுக்கு மட்டும் சொன்ன வார்த்தைகள் அல்ல என்பதைப் படிப்போர் உணர வேண்டும்.
வாழ்க்கையில் வேண்டுமானால் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு இருக்கலாம். யாராக இருந்தாலும் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டியவர்களே! எவருக்கும் இந்த உலகம் நிரந்தரமல்ல. கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாமல், தமக்காகவே சேர்ப்பவர்கள்தான் இப்படிப்பட்டவர்கள் என்கிறார். ஆகவே செல்வம், கடவுள் செல்வமாக இருக்க வேண்டும்.
‘போகும்போது எதையும் கொண்டு போகப் போவதில்லை’ என்பதை எல்லோருமே தான் சொல்கிறோம். அதை நாம் அனைவரும் உணர்ந்து இருக்கிறோம். ஆனால் நமது செயல் அதற்கு மாறாக இருக்கிறது. எனவே இத்தகைய நற்செய்திகளை ஆழ்ந்து படிப்போம். நெறியோடு வாழ்வோம். பிறரையும் வாழ வைப்போம்.
உடனே இயேசு பிரான் கேட்டவரை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ, பாகத்தைப் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யாரெனக் கூற முடியுமா?” என்று கேட்டார். பிறகு அவர்களைப் பார்த்து, “எவ்வகையான பேராசைக்கும் இடம் கொடுக்காமல், மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். அதிகமான உடைமைகளை வைத்திருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்து விடாது” என்று கூறினார்.
எப்பொழுதும் எளிமையான உவமைகளைச் சொல்லி, மக்களை நெறிப்படுத்திய இயேசு பிரான், இவ்விடத்திலும் அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார்.
“செல்வந்தராய் இருந்த ஒருவனுடைய நிலம், நன்றாக.. மிகுதியாக விளைந்தது. அவன் அந்த விளைச்சலைப் பார்த்து விட்டு, ‘நான் என்ன செய்வேன்? அதிகமாக விளைந்து விட்டதே! என்னுடைய விளை பொருட்களைச் சேர்த்து வைக்க இடம் இல்லையே!’ என்று எண்ணினான். உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“என் களஞ்சியங்கள் அனைத்தையும் இடித்து விட்டு, இன்னும் மிகப் பெரிதாகக் கட்டி விடுவேன். அங்கு கொண்டு போய், எனது தானியங்களையும் பொருட்களையும் சேர்த்து வைப்பேன்.” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
பின்பு நெஞ்சை நோக்கி, “என் நெஞ்சமே! உனக்குப் பல ஆண்டுகளுக்கு வேண்டிய, பல வகையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இனி நீ ஓய்வு எடுத்துக்கொள். நன்றாக உண்டு, குடித்து, மகிழ்ச்சியில் ஆடு. கும்மாளம் போடு எனச் சொல்வேன்” என்றான்.
ஆனால் கடவுளோ அவனை நோக்கி, “அறிவு கெட்டவனே! இன்று இரவே உனது உயிரானது, உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்படிப் பிரிந்த பிறகு, நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாக இருக்கும்” என்று கேட்டார்.
இதோடு இயேசு பெருமான் நிறுத்தி விட்டு, “கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய், தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே” என்றக் கருத்தை வெளிப்படுத்தினார்.
இந்நற்செய்தியை, உலகில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதரும், மிகவும் ஆழமாகப் படித்துத் தெளிவடைய வேண்டும்.
போதகரிடம் அவன் முதலில் கேட்டது, அறியாமையின் வெளிப்பாடாகும். ஒருவர் சொத்தை, ஒருவருக்குப் பங்கிட்டுக் கொடுக்கவா, இயேசு பிரான் இவ்வுலகத்திற்கு வந்தார்? அவர் மக்களை நெறிப்படுத்த வந்தவர் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை.
அறியாமை காரணமாக, நாமும் எவ்வளவோ பேச்சுகளை பேசி விடுகிறோம். எல்லோரையும் சாதாரணமாக எண்ணி விடுகிறோம்.
முதலில் இயேசுபிரான், அவனிடம் சாதாரணமாகப் பேசுகிறார். “உங்களுக்கு நடுவராகவோ, பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியது யார்?” என்ற வினாவைத் தொடுக்கிறார்.
முதல் கேள்வியிலேயே அவன் சிந்தித்திருக்க வேண்டும். சிந்திக்காமல் இருந்ததால்தான், அவன் இப்படிச் சொல்லி விட்டான் என்பதை இயேசு அறிந்து கொண்டார். அதனால் தான் அடுத்து வினா தொடுக்காமல், ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்.
“எவ்விதமான பேராசைக்கும் இடம் கொடுக்காமல் எச்சரிக்கையாக இருங்கள். அதிகமான உடைமைகளைக் கொண்டிருப்பதால், ஒருவருக்கு வாழ்வு வந்து விடாது” என்ற கருத்தை அங்கு பதிய வைக்கிறார். அப்பொழுதாவது அவன் உணர்ந்திருப்பானா? என்றால், ‘இல்லை’ என்றுதான் தோன்றுகிறது.
காரணம், இவ்வுலகத்தைப் பற்றியும், இவ்வுலக சொத்துகளைப் பற்றியும் கவலைப்படுகின்ற ஒருவன், இப்படியெல்லாம் சிந்திக்க முடியாதல்லவா? இவற்றையெல்லாம் அறிந்தவர்தான் இயேசு பிரான். இருந்தாலும் வழக்கம்போல், அவருக்கே உரிய பாணியில், எளிமையாக ஓர் உவமையை எடுத் துரைக்கத் தொடங்குகிறார்.
செல்வந்தன் ஒருவரிடம் இருந்து தொடங்குகிறார். செல்வம் பற்றிப் பேசுகிறார். களஞ்சியம் பற்றி விரித்துரைக்கிறார். செல்வந்தனுடைய எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.
அடேயப்பா! அவன் மனம் எப்படியெல்லாம் பேசுகிறது? ஏ! மனமே! நீ, நன்றாக ஓய்வு எடு. நன்றாக உண். நன்றாகக் குடி. குதூகலமாக ஆடு. என்றெல்லாம் எண்ணுவதைக் கவனிக்கிறார்.
இறுதியில், கடவுள் சொல்லும் ஒரு வார்த்தையில் எண்ணங்கள் தவிடு பொடியாகிறது.
‘இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்து விடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவைகள்’
இது அவனுக்கு மட்டும் சொன்ன வார்த்தைகள் அல்ல என்பதைப் படிப்போர் உணர வேண்டும்.
வாழ்க்கையில் வேண்டுமானால் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு இருக்கலாம். யாராக இருந்தாலும் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டியவர்களே! எவருக்கும் இந்த உலகம் நிரந்தரமல்ல. கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாமல், தமக்காகவே சேர்ப்பவர்கள்தான் இப்படிப்பட்டவர்கள் என்கிறார். ஆகவே செல்வம், கடவுள் செல்வமாக இருக்க வேண்டும்.
‘போகும்போது எதையும் கொண்டு போகப் போவதில்லை’ என்பதை எல்லோருமே தான் சொல்கிறோம். அதை நாம் அனைவரும் உணர்ந்து இருக்கிறோம். ஆனால் நமது செயல் அதற்கு மாறாக இருக்கிறது. எனவே இத்தகைய நற்செய்திகளை ஆழ்ந்து படிப்போம். நெறியோடு வாழ்வோம். பிறரையும் வாழ வைப்போம்.