ஆன்மிகம்
பிறரை மன்னிப்போம், நாமும் மன்னிப்பு பெறுவோம்
“எங்களுக்கு எதிராக குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்“(மத் 6:12). எனவே பிறரை மன்னிப்போம், நாமும் மன்னிப்பு பெறுவோம்.
அன்பின் பண்புகளில் தலை சிறந்தது மன்னிப்பு ஆகும். ஏசு நோய்களை குணமாக்கினார். இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்தார். தவறு செய்து வருந்தியவர்களையும், குற்றம் செய்தவர்களையும் மன்னித்தார். விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை கல்லால் எறிந்து கொல்ல வந்தவர்களிடமிருந்து காப்பாற்றி ‘நீர் போகலாம். இனி பாவம் செய்யாதீர்‘ (யோவா. 8:11) என்று கூறி பாவங்களை மன்னித்தார்.
பாவியானப் பெண் ஒருவர் நறுமண தைலத்தால் ஏசுவின் பாதங்களை கழுவிய போது அங்கிருந்த சமூகம் அவளை பாவியாக பார்த்தது. ஏசு மட்டும் அவளது மனித மாண்பை பார்த்து பாவத்தை மன்னித்து “உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்த நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இந்த பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும். இவரும் நினைவு கூறப்படுவார் என்று நான் உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்் என்கிறார் (மத். 26:13).
ஏசுவின் மன்னிப்பு மனப்பான்மையும், பாவிகள் மேல் அவர் கொண்டுள்ள பரிவும், அன்பும், இரக்கமும் அளவுக்கு அதிகமாக இருப்பதை காணமுடிகிறது. ஏனெனில் ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மை தண்டிப்பதில்லை. அவர் தமக்கு அஞ்சுவோருக்கு காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. (திபா103:8-11)
ஏசு போதித்தவர் மட்டுமல்ல வாழ்ந்து காட்டியவர். எனவே தான் அவர் உயிர்விடும்முன்பு சிலுவை என்ற மேடையிலிருந்து “தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை“ என்று கூறினார். (லூக். 23:34). ஏசு “பாவ மன்னிப்புக்காக சிந்தப்படும் என் ரத்தம்“ என்று கூறி தனது குருதியை சிந்துகிறார்.
இறைமகன் ஏசு நம்மை மன்னித்தது போல நமக்கு எதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்க சொல்கிறார். இதைத்தான் ஏசு கற்றுக் கொடுத்த ஜெபத்தில் “எங்களுக்கு எதிராக குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்“(மத் 6:12). எனவே பிறரை மன்னிப்போம், நாமும் மன்னிப்பு பெறுவோம்.
அருட்தந்தை அல்போன்ஸ், பூண்டி
பாவியானப் பெண் ஒருவர் நறுமண தைலத்தால் ஏசுவின் பாதங்களை கழுவிய போது அங்கிருந்த சமூகம் அவளை பாவியாக பார்த்தது. ஏசு மட்டும் அவளது மனித மாண்பை பார்த்து பாவத்தை மன்னித்து “உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்த நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இந்த பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும். இவரும் நினைவு கூறப்படுவார் என்று நான் உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்் என்கிறார் (மத். 26:13).
ஏசுவின் மன்னிப்பு மனப்பான்மையும், பாவிகள் மேல் அவர் கொண்டுள்ள பரிவும், அன்பும், இரக்கமும் அளவுக்கு அதிகமாக இருப்பதை காணமுடிகிறது. ஏனெனில் ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர். நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை. நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மை தண்டிப்பதில்லை. அவர் தமக்கு அஞ்சுவோருக்கு காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. (திபா103:8-11)
ஏசு போதித்தவர் மட்டுமல்ல வாழ்ந்து காட்டியவர். எனவே தான் அவர் உயிர்விடும்முன்பு சிலுவை என்ற மேடையிலிருந்து “தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்கு தெரியவில்லை“ என்று கூறினார். (லூக். 23:34). ஏசு “பாவ மன்னிப்புக்காக சிந்தப்படும் என் ரத்தம்“ என்று கூறி தனது குருதியை சிந்துகிறார்.
இறைமகன் ஏசு நம்மை மன்னித்தது போல நமக்கு எதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்க சொல்கிறார். இதைத்தான் ஏசு கற்றுக் கொடுத்த ஜெபத்தில் “எங்களுக்கு எதிராக குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும்“(மத் 6:12). எனவே பிறரை மன்னிப்போம், நாமும் மன்னிப்பு பெறுவோம்.
அருட்தந்தை அல்போன்ஸ், பூண்டி