ஆன்மிகம்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம். (உள்படம்: பனிமயமாதா).

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-07-27 04:59 GMT   |   Update On 2017-07-27 04:59 GMT
தூத்துக்குடியில், பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி பனிமய அன்னையின் திருவுருவ பவனி நடந்து வருகிறது. தற்போது 435-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் பிஷப் இவோன் அம்புரோஸ் அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது மக்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் புறாக்களை பறக்க விட்டனர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகம் சார்பில் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இழுவை கப்பல் மூலம் ஒலி எழுப்பப்பட்டது.

தொடர்ந்து மக்கள் நேர்ச்சையாக கொண்டு வந்த பால், வாழைப்பழம் ஆகியவற்றை கொடிமரத்தின் அடியில் வைத்து வணங்கினர். சிலர் சிறு குழந்தைகளையும் கொடி மரத்தின் அடியில் வைத்து ஆசி பெற்றனர். கொடியேற்றம் முடிந்தவுடன் நேர்ச்சையாக கொண்டு வந்த பழம், பால் உள்ளிட்ட பொருட்களை மக்கள், மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர்.

வருகிற 4-ந் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திரு உருவ சப்பர பவனி நடக்கிறது. தொடர்ந்து 5-ந் தேதி நகர வீதிகளில் அன்னையின் திரு உருவ சப்பர பவனி நடக்கிறது.
Tags:    

Similar News