ஆன்மிகம்
அன்பர்களே, நீங்கள் துன்பத்தை தாங்குவதிலும் பொறுமையை கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாக கொள்ளுங்கள் (யாக்கோபு 5:10).
காட்டில் மூங்கில் ஒரு நாள் வெட்டப்பட்ட போதும், செப்புக்கம்பியால் அதை துளைத்த போதும் “ஐயோ வலிக்கிறதே” என்று அழுதது. “கொஞ்சம் பொறுத்துக்கொள் “ என்று மூங்கிலைப்பார்த்து ஆறுதல் சொன்னது காற்று. மூங்கில் புல்லாங்குழல் ஆனது. மேடையில் உலகமே வியக்கும் வண்ணம் இசையை பொலிந்து கொண்டிருந்தது. புல்லாங்குழலை பார்த்து மேனி சிலிர்த்தது காற்று. எல்லோரும் புல்லாங்குழலை பாராட்டினார்கள். மூங்கில் முணுமுணுத்தது. துன்பம் இல்லையேல் இன்பம் இல்லை என்று.
நிலத்தை துளைத்தால் தான் விதை முளைக்கும். தங்கத்தை சுட்டால் தான் நகை கிடைக்கும். அதுபோல மனத்தை சுட்டால் தான் மனிதம் கிடைக்கும். வாழ்க்கை என்பது இறைவன் தந்த ஓவியம். வாழ்வது என்பது மனிதன் படைக்கும் காவியம் ஆகும்.
“அன்புக்குரியவர்களே, துன்பத்தீயில் நீங்கள் சோதிக்கப்படும் போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்து விட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்” (1 பேதுரு 4:12-13).
“கிறிஸ்துவும் உங்களுக்காக துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச்சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளர்கள். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. பழிக்கப்பட்ட போது பதிலுக்கு பலிக்கவில்லை; துன்புறுத்தப்பட்ட போது அச்சுறுத்தவில்லை; நியாயமாக தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார்” (1 பேதுரு 2:21-23).
அன்பர்களே, நீங்கள் துன்பத்தை தாங்குவதிலும் பொறுமையை கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாக கொள்ளுங்கள் (யாக்கோபு 5:10). விழிப்பாயிருங்கள்; நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; துணிவுடன் நடந்து கொள்ளுங்கள்; வலிமையுடன் செயல்படுங்கள். அனைத்தையும் அன்போடு செய்யுங்கள் (1 கொரிந்தியர் 16:13-14).
அருட்திரு. வி.டேவிட்ராஜ், பங்குத்தந்தை, ஒட்டன்சத்திரம்.
நிலத்தை துளைத்தால் தான் விதை முளைக்கும். தங்கத்தை சுட்டால் தான் நகை கிடைக்கும். அதுபோல மனத்தை சுட்டால் தான் மனிதம் கிடைக்கும். வாழ்க்கை என்பது இறைவன் தந்த ஓவியம். வாழ்வது என்பது மனிதன் படைக்கும் காவியம் ஆகும்.
“அன்புக்குரியவர்களே, துன்பத்தீயில் நீங்கள் சோதிக்கப்படும் போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்து விட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்” (1 பேதுரு 4:12-13).
“கிறிஸ்துவும் உங்களுக்காக துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச்சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளர்கள். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. பழிக்கப்பட்ட போது பதிலுக்கு பலிக்கவில்லை; துன்புறுத்தப்பட்ட போது அச்சுறுத்தவில்லை; நியாயமாக தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார்” (1 பேதுரு 2:21-23).
அன்பர்களே, நீங்கள் துன்பத்தை தாங்குவதிலும் பொறுமையை கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாக கொள்ளுங்கள் (யாக்கோபு 5:10). விழிப்பாயிருங்கள்; நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; துணிவுடன் நடந்து கொள்ளுங்கள்; வலிமையுடன் செயல்படுங்கள். அனைத்தையும் அன்போடு செய்யுங்கள் (1 கொரிந்தியர் 16:13-14).
அருட்திரு. வி.டேவிட்ராஜ், பங்குத்தந்தை, ஒட்டன்சத்திரம்.