ஆன்மிகம்
நாகர்கோவில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய அர்ச்சிப்பு விழா நாளை நடக்கிறது
நாகர்கோவில், மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய அடித்தளம் அர்ச்சிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பல ஆண்டுகளாக இருந்த பழமையான ஆலயம் மாற்றப்பட்டு தற்போது புதிய ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஆலயத்தின் அடித்தளம் பகுதி கட்டி முடிக்கப்பட்டு பக்தர்களின் வசதிக்காக நாளை (சனிக்கிழமை) அர்ச்சிக்கப்படுகிறது.
இதற்கான விழா, நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆலயத்தின் அடித்தளத்தை அர்ச்சித்து திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து ஆயர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது.
முன்னதாக மாலை 5.30 மணிக்கு ஆலய வளாகத்தின் அருகில் உள்ள கல்லறை தோட்ட சிற்றாலயத்தில் இருந்து கொடிபவனி நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரியதாஸ், அருட்பணியாளர் அந்தோணி பிச்சை, பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
இதற்கான விழா, நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆலயத்தின் அடித்தளத்தை அர்ச்சித்து திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து ஆயர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது.
முன்னதாக மாலை 5.30 மணிக்கு ஆலய வளாகத்தின் அருகில் உள்ள கல்லறை தோட்ட சிற்றாலயத்தில் இருந்து கொடிபவனி நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரியதாஸ், அருட்பணியாளர் அந்தோணி பிச்சை, பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.