ஆன்மிகம்
களைகளாய் வாழ்ந்தால் அழிவு நிச்சயம். பலன் கொடுக்கும் பயிராக இருந்தால் மட்டுமே நமக்கு விண்ணக வாழ்க்கை கிடைக்கும். நாம் இறை வார்த்தையின் படி உறுதியாய் வாழவேண்டும்.
விதைப்பவன் ஒருவன் விதைப்பதற்குரிய விதைகளைக் கூடையில் எடுத்துக் கொண்டு வயலை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
சில விதைகள் அவனுடைய கூடையிலிருந்து நழுவி வழியோரத்தில் விழுந்தன. அந்த விதைகள் முளைப்பதற்கு முன்பாகவே வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்று விட்டன.
இன்னும் சில விதைகள் பாறை நிலத்தில் விழுந்தன. மண் பிடிப்பு இல்லாத பாறை நிலத்தில் விதைகள் விரைவிலேயே முளைத்துவிட்டன. ஆனால் நிலத்தில் வேர் பிடிக்கவில்லை. சூரியன் வந்தபோது அதன் வெப்பத்தைத் தாங்க முடியாத அந்த முளைகள் எல்லாம் வெயிலில் காய்ந்து போய்விட்டன.
சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. அவை முட்செடிகளிடையே விழுந்ததால் பறவைகளால் அவற்றை நெருங்க முடியவில்லை. அவை நிலத்தில் வேர்விட்டு முளைத்தன. நிலத்தில் வேரூன்றி விட்டதால் அவற்றைக் கதிரவனாலும் கருக வைக்க முடியவில்லை. ஆனால் வளர, வளர தன்னைச் சுற்றி நின்ற முட்செடிகளாலேயே அவை நெரிக்கப்பட்டு பலன் தராமல் போயின.
சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் மண்ணில் புதைபட்டதால் பறவைகளின் அலகுகளுக்குத் தப்பின, வளர்வதற்குத் தேவையான நீர் இருந்ததால் அவற்றைச் சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கவில்லை. நிலம் விவசாயத்துக்குத் தயாராக இருந்ததால் முட்செடிகள் எங்கும் இல்லை. எனவே அந்த விதைகள் நன்றாக முளைத்து வளர்ந்தன. அவற்றில் சில முப்பது மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில நூறு மடங்காகவும் பலனளித்தன.
இயேசு, இந்த உவமையின் விளக்கத்தை மக்களுக்கு விளக்கினார்.
வழியோரத்தில் விழுந்த விதைகளைப் போன்றவர்கள் இறையரசைக் குறித்த வார்த்தைகளைக் கேட்பார்கள், ஆனால் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் காதுகளில் விழுந்த வார்த்தைகளை தீயவன் வந்து கவர்ந்து சென்று விடுவான். அது அவனுடைய உள்ளத்துக்குள் செல்லாது.
பாறை நிலத்தில் விழுந்தவர்கள் இறை வார்த்தையை மிகவும் மகிழ்வுடன் கேட்டு உள்ளுக்குள் முளை விடுவார்கள். ஆனால் சிறிது நாட்களிலேயே ஏதேனும் சோதனைகளோ, எதிர்ப்புகளோ வரும்போது எதிர்த்து நிற்கும் வலு இல்லாத தனால் வார்த்தைகளை இறக்க விடுவார்கள்.
முட்செடிகளின் நடுவே விழுந்த விதையைப் போன்றவர்கள், இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்று முடிவெடுத்து நல்ல முறையில் நடக்கத் தொடங்குவார்கள். ஆனால் உலகக் கவலைகள், பணம் சேர்க்கும் ஆசை, சிற்றின்ப மோகம் இவற்றால் நெரிக்கப்பட்டு பலனளிக்காமல் போவார்கள்.
நல்ல நிலத்தில் விழுந்தவிதையைப் போன்றோர், இறை வார்த்தையைக் கேட்கும் முன்பாகவே தங்கள் மனதை அதற்கேற்பத் தயாரித்துக் கொள்வார்கள். பின் இறை வார்த்தையைக் கேட்டதும் அதை உள்வாங்கிக் கொள்வார்கள். அவர்களை உலகக் கவலைகளோ, சிற்றின்ப மோகங்களோ, எதிர்ப்பாளர்களின் போலிக்கூச்சல்களோ பின் வாங்க வைக்காது. அவர்கள் நிலைத்திருந்து செயல்களில் இறை வார்த்தையை வெளிப்படுத்துவார்கள்.
அவர்களில், சிலர் முப்பது மடங்கு, சிலர் அறுபது மடங்கு, சிலர் நூறு மடங்கு என பயன் தருவார்கள். இயேசு சொல்ல, மக்கள் அனைவரும் தெளிவடைந்தார்கள்.
‘இன்னோர் உவமையும் சொல்கிறேன் கேளுங்கள்...’ இயேசு ஆரம்பித்தார்.
ஒருவன் வயலில் நல்ல விதைகளை விதைத்தான். ஆனால் அவன் தூங்கும் போது பகைவன் வந்து அவனுடைய வயலில் களைகளையும் விதைத்து விட்டுப் போனான். முளைத்து வருகையில் களையும் பயிரும் வித்தியாசம் காட்டவில்லை.
வளர வளர களைகள் தங்கள் சுய முகத்தைக் காட்டத் தொடங்கின. பயிர்களோடு பயிர்களாக களைகள் வளர்ந்து பயிர்களின் சத்தையும் உறிஞ்சிக் கொண்டிருப்பதை வேலையாள் கண்டு தலைவனிடம் வந்தான்.
‘ஐயா... நீர் உமது வயலில் நல்ல விதைகளையல்லவா விதைத்தீர். களைகள் வந்திருக்கின்றனவே. நான் போய் களைகளை வெட்டி விடவா?’
‘வேண்டாம், நீ களைகளைப் பிடுங்குகையில் பயிரையும் கூட அழித்துவிடக் கூடும். அறுவடைக்காலம் வரை இரண்டுமே வளரட்டும். அறுவடை செய்யும்போது பயிர்களைத் தனியாகவும், களைகளைத் தனியாகவும் கட்டு. பயிர்களை என்னுடைய களஞ்சியத்துக்கு அனுப்பி வை. களைகளையோ அழியா நெருப்பில் சுட்டெரி’ தலைவன் ஆணையிட்டான்.
இது தான் கடைசி காலத்தில் நடக்கும். இறை வார்த்தை பைபிளின் வழியாக எல்லோருக்கும் தரப்பட்டிருக்கிறது. அதை சரியான முறையில் உள்வாங்கி, இதயத்தில் பதியனிட்டு, ஆழ வேர்பிடிக்க வைத்து, கனி கொடுக்க வைப்பவர்களே உண்மையில் இறைவனின் பிள்ளைகள். அத்தகைய மக்களைப் பார்த்தே இறைவன் பூரிப்படைகிறார்.
களைகளாய் வாழ்ந்தால் அழிவு நிச்சயம். பலன் கொடுக்கும் பயிராக இருந்தால் மட்டுமே நமக்கு விண்ணக வாழ்க்கை கிடைக்கும். நாம் இறை வார்த்தையின் படி உறுதியாய் வாழவேண்டும்.
‘வார்த்தையின் மனித வடிவமே இயேசு’ என்கிறது பைபிள். அவருடைய வாழ்க்கையைப் பின்பற்றுவதே இறையரசில் நுழைவதற்கான ஒரே வழி என்பதைப் புரிந்து செயல்படுவோம்.
சில விதைகள் அவனுடைய கூடையிலிருந்து நழுவி வழியோரத்தில் விழுந்தன. அந்த விதைகள் முளைப்பதற்கு முன்பாகவே வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்று விட்டன.
இன்னும் சில விதைகள் பாறை நிலத்தில் விழுந்தன. மண் பிடிப்பு இல்லாத பாறை நிலத்தில் விதைகள் விரைவிலேயே முளைத்துவிட்டன. ஆனால் நிலத்தில் வேர் பிடிக்கவில்லை. சூரியன் வந்தபோது அதன் வெப்பத்தைத் தாங்க முடியாத அந்த முளைகள் எல்லாம் வெயிலில் காய்ந்து போய்விட்டன.
சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. அவை முட்செடிகளிடையே விழுந்ததால் பறவைகளால் அவற்றை நெருங்க முடியவில்லை. அவை நிலத்தில் வேர்விட்டு முளைத்தன. நிலத்தில் வேரூன்றி விட்டதால் அவற்றைக் கதிரவனாலும் கருக வைக்க முடியவில்லை. ஆனால் வளர, வளர தன்னைச் சுற்றி நின்ற முட்செடிகளாலேயே அவை நெரிக்கப்பட்டு பலன் தராமல் போயின.
சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் மண்ணில் புதைபட்டதால் பறவைகளின் அலகுகளுக்குத் தப்பின, வளர்வதற்குத் தேவையான நீர் இருந்ததால் அவற்றைச் சூரியனின் கதிர்கள் சுட்டெரிக்கவில்லை. நிலம் விவசாயத்துக்குத் தயாராக இருந்ததால் முட்செடிகள் எங்கும் இல்லை. எனவே அந்த விதைகள் நன்றாக முளைத்து வளர்ந்தன. அவற்றில் சில முப்பது மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில நூறு மடங்காகவும் பலனளித்தன.
இயேசு, இந்த உவமையின் விளக்கத்தை மக்களுக்கு விளக்கினார்.
வழியோரத்தில் விழுந்த விதைகளைப் போன்றவர்கள் இறையரசைக் குறித்த வார்த்தைகளைக் கேட்பார்கள், ஆனால் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் காதுகளில் விழுந்த வார்த்தைகளை தீயவன் வந்து கவர்ந்து சென்று விடுவான். அது அவனுடைய உள்ளத்துக்குள் செல்லாது.
பாறை நிலத்தில் விழுந்தவர்கள் இறை வார்த்தையை மிகவும் மகிழ்வுடன் கேட்டு உள்ளுக்குள் முளை விடுவார்கள். ஆனால் சிறிது நாட்களிலேயே ஏதேனும் சோதனைகளோ, எதிர்ப்புகளோ வரும்போது எதிர்த்து நிற்கும் வலு இல்லாத தனால் வார்த்தைகளை இறக்க விடுவார்கள்.
முட்செடிகளின் நடுவே விழுந்த விதையைப் போன்றவர்கள், இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்று முடிவெடுத்து நல்ல முறையில் நடக்கத் தொடங்குவார்கள். ஆனால் உலகக் கவலைகள், பணம் சேர்க்கும் ஆசை, சிற்றின்ப மோகம் இவற்றால் நெரிக்கப்பட்டு பலனளிக்காமல் போவார்கள்.
நல்ல நிலத்தில் விழுந்தவிதையைப் போன்றோர், இறை வார்த்தையைக் கேட்கும் முன்பாகவே தங்கள் மனதை அதற்கேற்பத் தயாரித்துக் கொள்வார்கள். பின் இறை வார்த்தையைக் கேட்டதும் அதை உள்வாங்கிக் கொள்வார்கள். அவர்களை உலகக் கவலைகளோ, சிற்றின்ப மோகங்களோ, எதிர்ப்பாளர்களின் போலிக்கூச்சல்களோ பின் வாங்க வைக்காது. அவர்கள் நிலைத்திருந்து செயல்களில் இறை வார்த்தையை வெளிப்படுத்துவார்கள்.
அவர்களில், சிலர் முப்பது மடங்கு, சிலர் அறுபது மடங்கு, சிலர் நூறு மடங்கு என பயன் தருவார்கள். இயேசு சொல்ல, மக்கள் அனைவரும் தெளிவடைந்தார்கள்.
‘இன்னோர் உவமையும் சொல்கிறேன் கேளுங்கள்...’ இயேசு ஆரம்பித்தார்.
ஒருவன் வயலில் நல்ல விதைகளை விதைத்தான். ஆனால் அவன் தூங்கும் போது பகைவன் வந்து அவனுடைய வயலில் களைகளையும் விதைத்து விட்டுப் போனான். முளைத்து வருகையில் களையும் பயிரும் வித்தியாசம் காட்டவில்லை.
வளர வளர களைகள் தங்கள் சுய முகத்தைக் காட்டத் தொடங்கின. பயிர்களோடு பயிர்களாக களைகள் வளர்ந்து பயிர்களின் சத்தையும் உறிஞ்சிக் கொண்டிருப்பதை வேலையாள் கண்டு தலைவனிடம் வந்தான்.
‘ஐயா... நீர் உமது வயலில் நல்ல விதைகளையல்லவா விதைத்தீர். களைகள் வந்திருக்கின்றனவே. நான் போய் களைகளை வெட்டி விடவா?’
‘வேண்டாம், நீ களைகளைப் பிடுங்குகையில் பயிரையும் கூட அழித்துவிடக் கூடும். அறுவடைக்காலம் வரை இரண்டுமே வளரட்டும். அறுவடை செய்யும்போது பயிர்களைத் தனியாகவும், களைகளைத் தனியாகவும் கட்டு. பயிர்களை என்னுடைய களஞ்சியத்துக்கு அனுப்பி வை. களைகளையோ அழியா நெருப்பில் சுட்டெரி’ தலைவன் ஆணையிட்டான்.
இது தான் கடைசி காலத்தில் நடக்கும். இறை வார்த்தை பைபிளின் வழியாக எல்லோருக்கும் தரப்பட்டிருக்கிறது. அதை சரியான முறையில் உள்வாங்கி, இதயத்தில் பதியனிட்டு, ஆழ வேர்பிடிக்க வைத்து, கனி கொடுக்க வைப்பவர்களே உண்மையில் இறைவனின் பிள்ளைகள். அத்தகைய மக்களைப் பார்த்தே இறைவன் பூரிப்படைகிறார்.
களைகளாய் வாழ்ந்தால் அழிவு நிச்சயம். பலன் கொடுக்கும் பயிராக இருந்தால் மட்டுமே நமக்கு விண்ணக வாழ்க்கை கிடைக்கும். நாம் இறை வார்த்தையின் படி உறுதியாய் வாழவேண்டும்.
‘வார்த்தையின் மனித வடிவமே இயேசு’ என்கிறது பைபிள். அவருடைய வாழ்க்கையைப் பின்பற்றுவதே இறையரசில் நுழைவதற்கான ஒரே வழி என்பதைப் புரிந்து செயல்படுவோம்.