ஆன்மிகம்

பாலப்பள்ளம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா தேர்ப்பவனி இன்று நடக்கிறது

Published On 2016-11-19 07:56 IST   |   Update On 2016-11-19 07:56:00 IST
பாலப்பள்ளம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா தேர்ப்பவனி இன்று நடக்கிறது.
குளச்சலில் உள்ள பாலப்பள்ளம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கடந்த 11–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் பங்கு தந்தை பிரின்டோ குரியாஸ் திருக்கொடியை ஏற்றி வைத்தார்.

விழாவின் 9–ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு சூசைபுரம் மறைவட்ட பங்கு தந்தை ஆன்றனி ஜோஸ், தக்காளிவிளை பங்கு தந்தை லின்சிலால் மங்கலத்து ஆகியோர் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இரவு 8 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனி நடக்கிறது.
திருவிருந்து

விழா நிறைவு நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு காலை ஜெபம், 10 மணிக்கு தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன், அருட்தந்தை டோஜி பரம்பில் ஆகியோர் கலந்து கொள்ளும் திருப்பலி முதல் திருவிருந்து நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை திருக்கொடியிறக்கமும், இரவு 7.30 மணிக்கு மறை மாவட்ட மறைகல்வி மன்ற இயக்குனர் அருட்தந்தை அலெக்ஸ் புத்தேட் தலைமையில் மறைகல்வி ஆண்டுவிழாவும், தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. குளச்சல் ஜே.எஸ்.ஆர்.கேஸ் லிங்ஸ் உரிமையாளர் ஜான் சுந்தர்ராஜ் பரிசுகளை வழங்குகிறார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கிறிஸ்து அரசர் ஆலய பங்குதந்தை பிரின்டோ குரியாஸ், அருட்சகோதரிகள், பங்குபேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

Similar News