ஆன்மிகம்
சுரண்டை அருகே தூய யோவான் ஆலய தேர் பவனி
சுரண்டை அருகே தூய யோவான் ஆலய திருவிழாவில் புனித மரியன்னை, புனித அருளப்பர், மிக்கேல் அதிதூதர் எழுந்தருளிய தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
சுரண்டை அருகே வாடியூர் தூய யோவான் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி, சமபந்தி விருந்து, நற்கருணை பவனி நடந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தேர் பவனி, கும்பிடு சரணம் நடந்தது. 10-ம் திருநாளான நேற்று காலை 8 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலி, புதுநன்மை விழா நடந்தது.
மாலை 4 மணிக்கு புனித மரியன்னை, புனித அருளப்பர், மிக்கேல் அதிதூதர் ஆகியோர் தனித்தனியே எழுந்தருளிய தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமையில் ஊர் கமிட்டி தலைவர் ஜேசுராஜன், தர்மகர்த்தா மிக்கேல் ராஜ், கட்டளைதாரர் அந்தோணி சவரிமுத்து, உபதேசியார் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.
மாலை 4 மணிக்கு புனித மரியன்னை, புனித அருளப்பர், மிக்கேல் அதிதூதர் ஆகியோர் தனித்தனியே எழுந்தருளிய தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமையில் ஊர் கமிட்டி தலைவர் ஜேசுராஜன், தர்மகர்த்தா மிக்கேல் ராஜ், கட்டளைதாரர் அந்தோணி சவரிமுத்து, உபதேசியார் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.