search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "st john the baptist"

    இட்டமொழி அருகே உள்ள சுவிசேஷபுரம் தூய யோவான் ஆலயத்தில் சேர்ப்பின் பண்டிகை கடந்த 4 நாட்கள் நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    இட்டமொழி அருகே உள்ள சுவிசேஷபுரம் தூய யோவான் ஆலயத்தில் சேர்ப்பின் பண்டிகை கடந்த 4 நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலையில் ஆயத்த ஆராதனை, நற்செய்தி கூட்டம் நடந்தது. 2-ம் நாள் அதிகாலையில் அதிசயபுரம் சேகர குரு ஜெசு விக்டர் தேவசெய்தி வழங்கினார். காலையில் வேதாகம தேர்வு, பெண்கள் பண்டிகை, இந்திய மிஷனரி சங்க ஊழிய பகிர்வு ஆராதனை நடந்தது.

    3-ம் நாள் அதிகாலையில் அருணோதய பிரார்த்தனை, காலையில் பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை நடந்தது. மதியம் வருடாந்திர கூட்டம், மாலையில் விளையாட்டு போட்டிகள், இரவில் பஜனை பிரசங்கம் நடந்தது. 4-ம் நாள் காலையில் பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடந்தது.

    டோனாவூர் சேகர குரு வசந்தகுமார் தேவசெய்தி வழங்கினார். இரவில் சபைமன்ற அளவிலான கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேகர குரு பாஸ்கர் கனகராஜ் தலைமையில், சபை மக்கள் செய்து இருந்தனர்.
    சுரண்டை அருகே தூய யோவான் ஆலய திருவிழாவில் புனித மரியன்னை, புனித அருளப்பர், மிக்கேல் அதிதூதர் எழுந்தருளிய தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
    சுரண்டை அருகே வாடியூர் தூய யோவான் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி, சமபந்தி விருந்து, நற்கருணை பவனி நடந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தேர் பவனி, கும்பிடு சரணம் நடந்தது. 10-ம் திருநாளான நேற்று காலை 8 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலி, புதுநன்மை விழா நடந்தது.

    மாலை 4 மணிக்கு புனித மரியன்னை, புனித அருளப்பர், மிக்கேல் அதிதூதர் ஆகியோர் தனித்தனியே எழுந்தருளிய தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமையில் ஊர் கமிட்டி தலைவர் ஜேசுராஜன், தர்மகர்த்தா மிக்கேல் ராஜ், கட்டளைதாரர் அந்தோணி சவரிமுத்து, உபதேசியார் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர். 
    ×