ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் புனித அமல அன்னை ஆலய தேர்பவனி

Published On 2017-12-11 09:33 IST   |   Update On 2017-12-11 09:33:00 IST
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் புனித அமல அன்னை ஆலய திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு வருடந்தோறும் டிசம்பர் மாதத்தில் திருவிழா மற்றும் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் தேர்பவனி நடைபெற்றது. 

இதில் மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட தேரில் அமல அன்னை சொரூபம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ஆலயத்தில் இருந்து தேர்பவனி புறப்பட்டு அம்மாமண்டபம் ரோடு வழியாக மாம்பழச்சாலையில் உள்ள ஹோலி கான்வென்ட்டை சென்றடைந்தது. பின்னர் அதே வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. 

இந்த தேர் பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை மாத்யூ, உதவி பங்கு தந்தை தைனீஸ் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.

Similar News