ஆன்மிகம்

பாளையங்கோட்டையில் சவேரியர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-11-25 09:35 IST   |   Update On 2017-11-25 09:35:00 IST
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது.
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயம் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை 6.30 மணியில் ஆலய வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் விழா கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாளையங்கோட்டை மறைமாவட்ட அதிபர் அல்போன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஆயர் இல்ல அருட்தந்தை ராபின் மறையுரை ஆற்றினார். விழா நாட்களில் சிறப்பு திருப்பலி, மறையுரை காலையும், மாலையும் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஒப்புரவு அருட்சாதனம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 2-ந் தேதி மாலை 6 மணிக்கு புனிதரின் திருஉருவ பவனி மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு புதுநன்மை விழா நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை சவேரியர் ஆலய திருப்பணி குழுவினர் செய்துள்ளனர்.

Similar News