ஆன்மிகம்
திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா 17-ந்தேதி தொடங்குகிறது
நெல்லை மாவட்டம் திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா, வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழா நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மறுநாள் காலை 6.30 மணிக்கு திருப்பவனி, திருப்பலியை தொடர்ந்து, தூத்துக் குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார்.
அன்று மாலையில் ஜெபமாலை, மறையுரை, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பவனி, திருப்பலியும், மாலையில் மறையுரை, கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
8-ந் திருநாளான 24-ந் தேதி அன்று மாலை நகர வீதிகளில் நற்கருணை பவனி நடக்கிறது. 9-ந் திருநாளான 25-ந் தேதி (சனிக்கிழமை) புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தை, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சிப்பு செய்து பெருவிழா திருப்பலியை நடத்தி வைக்கிறார். அதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் சப்பர பவனி நடக்கிறது.
10-ந் திருநாளான 26-ந் தேதியன்று பெருவிழா கூட்டு திருப்பலியும், மாலையில் நகர வீதிகளில் சப்பர பவனியும், இரவு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் பிரிட்டோ, பங்கு மேய்ப்பு பணிக்குழுவினர், அன்பியங்கள், இறை மக்கள் செய்து வருகின்றனர்.
அன்று மாலையில் ஜெபமாலை, மறையுரை, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பவனி, திருப்பலியும், மாலையில் மறையுரை, கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
8-ந் திருநாளான 24-ந் தேதி அன்று மாலை நகர வீதிகளில் நற்கருணை பவனி நடக்கிறது. 9-ந் திருநாளான 25-ந் தேதி (சனிக்கிழமை) புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலயத்தை, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சிப்பு செய்து பெருவிழா திருப்பலியை நடத்தி வைக்கிறார். அதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் சப்பர பவனி நடக்கிறது.
10-ந் திருநாளான 26-ந் தேதியன்று பெருவிழா கூட்டு திருப்பலியும், மாலையில் நகர வீதிகளில் சப்பர பவனியும், இரவு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் பிரிட்டோ, பங்கு மேய்ப்பு பணிக்குழுவினர், அன்பியங்கள், இறை மக்கள் செய்து வருகின்றனர்.