ஆன்மிகம்

ஆலந்தலை புனித பேதுரு, புனித பவுல் ஆலய திருவிழா

Published On 2017-10-07 08:52 IST   |   Update On 2017-10-07 08:52:00 IST
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை புனித பேதுரு, புனித பவுல் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை புனித பேதுரு, புனித பவுல் ஆலய திருவிழா நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை புனித அருளானந்தர் கல்லூரி ஆங்கில பேராசிரியரும், சேசு சபை குருவுமான ரூபஸ் திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து நற்கருணை ஆசீர் நடந்தது.

விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 10-ம் திருநாளான 14-ந்தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. 11-ம் திருநாளான 15-ந்தேதி காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை வில்சன், உதவி பங்குதந்தை ரோசன் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

Similar News