ஆன்மிகம்

புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா

Published On 2017-10-02 08:51 IST   |   Update On 2017-10-02 08:51:00 IST
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பனிமய மாதா ஆலய பங்குதந்தை லெனின் டிரோஸ் திருவிழா கொடியேற்றினார்.

விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 8-ந்தேதி காலையில் திருவிழா திருப்பலி, அன்னையின் தேர் பவனி, மாலையில் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா மாலை ஆராதனை, சப்பர பவனி நடக்கிறது. 9-ந்தேதி காலையில் புனித மிக்கேல் அதிதூதர் திருவிழா திருப்பலி, சப்பர பவனி, மாலையில் நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் நடக்கிறது.

Similar News