ஆன்மிகம்

சாயல்குடி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா

Published On 2017-09-07 15:54 IST   |   Update On 2017-09-07 15:55:00 IST
சாயல்குடி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவின் பத்தாம் நாள் நிறைவாக மாதாவின் உருவத்தைத் தாங்கிய தேரானது முக்கிய வீதிகளில் பவனி வந்தது.
சாயல்குடியில் ஆரோக்கியமாதா ஆலய திருவிழா நடைபெற்றது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவை முன்னிட்டு 10 நாட்கள் தொடர்ந்து பங்குத் தந்தையர்களின் ஆடம்பரத் திருப்பலியும், மாதா வைப்பற்றிய மறையுரையும் நடைபெற்றது.

பத்தாம் நாள் நிறைவாக மாதாவின் உருவத்தைத் தாங்கிய தேரானது முக்கிய வீதிகளில் பவனி வந்தது.

சாயல்குடி பங்கைச் சார்ந்த இறைமக்களுடன் சுற்றுவட்டார பொது மக்களும் விழாவில் கலந்து கொண்டு மரியே வாழ்க, மாதாவே வாழ்க என்ற கோ‌ஷத்துடன் தேரை வீதிகள் வழியாக இழுத்துச் சென்று ஆரோக்கியமாதா ஆலயம் வந்தடைந்தனர். பின்னர் ஆலயத்தில் நடை பெற்ற வழிபாட்டிலும் கலந்து கொண்டனர்.

Similar News