ஆன்மிகம்

வாடியூர் தூயயோவான் ஆலய தேர் திருவிழா

Published On 2017-09-04 10:47 IST   |   Update On 2017-09-04 10:47:00 IST
சுரண்டை அருகே வாடியூரில் தூய யோவான் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு தேர் சப்பரத்தில் மிக்கேல் அதி தூதர், தூய யோவான் மற்றும் மரியன்னை எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.
சுரண்டை அருகே வாடியூரில் தூய யோவான் ஆலய 104-வது தேர்த்திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு திருப்பலி, இன்னிசை நற்செய்தி பெருவிழா, அன்பியக்கலைவிழா, பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், நற்கருணை பவனி நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர் சப்பரத்தில் மிக்கேல் அதி தூதர், தூய யோவான் மற்றும் மரியன்னை எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.

விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமையில் ஊர் தலைவர் சேசுராஜன், கட்டளைதாரர் அந்தோணி சேவியர், தர்மகர்த்தா சேசுராஜ், உபதேசியார் சவரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் வாடியூர், மரியதாய்புரம், ஆனைகுளம், குறிச்சான்பட்டி சபைகளை சேர்ந்த இறைமக்கள் கலந்துகொண்டனர்.

Similar News