ஆன்மிகம்
திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை கெபி திருவிழா

Published On 2017-08-30 08:47 IST   |   Update On 2017-08-30 08:47:00 IST
கோவை சவுரிபாளையத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை கெபி திருவிழா நேற்று தொடங்கியது.
கோவை சவுரிபாளையத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை கெபி திருவிழா நேற்று தொடங்கியது. தொடக்க விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள நல்லாயன் குருத்துவ கல்லூரியை சேர்ந்த ஸ்தனிஸ்லாஸ் அடிகள் கலந்து கொண்டு கொடியேற்றினார். பின்னர் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது.

இதில் ஆலய பங்குகுரு ஜெகன் ஆண்டனி திருப்பலியை நடத்தினார். இதில் உதவி பங்குகுரு ஜஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவிழாவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர்பவனி வருகிற 8-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது. பின்னர் இரவு 8.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தை சேர்ந்த நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

Similar News