ஆன்மிகம்

புத்தூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் தேர் பவனி

Published On 2017-08-19 15:22 IST   |   Update On 2017-08-19 15:22:00 IST
திருச்சி மாவட்டம் புத்தூர் பங்கை சேர்ந்த புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பாத்திமா காட்சிகளின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று மாலை பெருவிழா திருப்பலி மாலை 6-30மணிக்கு நடக்கிறது.
திருச்சி மாவட்டம் புத்தூர் பங்கை சேர்ந்த புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பாத்திமா காட்சிகளின் நூற்றாண்டு விழா, நற்கருணை விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி இன்று மாலை பெருவிழா திருப்பலி மாலை 6-30மணிக்கு நடக்கிறது. மேலும் இரவு தேர் பவனி நடக்கிறது. அதனை புனித ஜேம்ஸ் பள்ளி முதல்வர் தாமஸ் அர்ச்சிப்பு செய்து வைக்கிறார்.

புனித பாத்திமா அன்னை ஆலயம், ஆபிசர்ஸ் காலனி, மதுரம் காலனி, குரு மெடிக்கல்ஸ், மாருதி மருத்து வமனை, பட்டாபிராமன் பிள்ளை தெரு, காவேரி மருத்துவ மனை, பாத்திமா பள்ளி, புத்தூர் நால்ரோடு சந்திப்பு வழியாக ஆலயம் சென்ற டைகிறது.நாளை 20-ந்தேதி நற்கருணை பெருவிழா, திருப்பலி, நற்கருணை பவனி நடக்கிறது..இரவு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் நடக்கிறது.

Similar News