ஆன்மிகம்
தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா 3-ந்தேதி தொடங்குகிறது
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா வருகிற 3-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
ஆரல்வாய்மொழி தேவசகாயம்மவுண்ட் காற்றாடிமலையில் தூய வியாகுல அன்னை, மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை ஆகிய இரட்டை திருத்தலம் உள்ளது. இங்கு தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாவட்டத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு ஆலய திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளில் காலை 6 மணிக்கு திருப்பலி, சிலுவைபாதை, இரவு 7 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட கொடிமரம் அர்ச்சிப்பு, கொடியேற்றம் போன்றவை நடக்கிறது. பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமை தாங்குகிறார். கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல் மறையுரையாற்றுகிறார்.
தொடர்ந்து 4-ந் தேதி முதல் 9-ம் தேதி வரையுள்ள திருவிழா நாட்களில் திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.
மார்ச் 10-ந் தேதி காலை 6.45 மணிக்கு சிலுவை பாதை, இரவு 7 மணிக்கு திருப்பலி, 8.45 மணிக்கு நற்கருணை பவனி போன்றவை நடைபெறும். திருவிழாவின் 9-வது நாளான 11-ந் தேதி காலை 6 மணிக்கு தேவசகாயம் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் திருப்பலியும், மாலையில் ஆராதனையும் நடக்கிறது. ஆராதனையில் தேவசகாயம்மவுண்ட் மறைவட்ட முதன்மை பணியாளர் பெர்பெச்சுவல் ஆன்டனி, முதன்மை அருட்பணியாளர் சாலமோன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து, இரவு 9.30 மணிக்கு வாணவேடிக்கையும், 10.30 மணிக்கு தேர்ப்பவனியும் நடைபெறும்.
திருவிழாவின் இறுதி நாளான 12-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை, 5 மணிக்கு திருவிழா திருப்பலி ஆகியவை நடைபெறும். இதில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார். காலை 7 மணிக்கு மலையாள திருப்பலியும், 8.30 மணிக்கு விருந்தினர் திருப்பலியும், 10.30 மணிக்கு நேர்ச்சை திருப்பலியும் நடக்கிறது.
மாலை 3.30 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 10 மணிக்கு மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை வரலாற்று நாடகம் ஆகியவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்டீபன், உதவி பங்குதந்தை ரவிகாட்சன் கென்னடி, அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.
இந்த ஆண்டு ஆலய திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளில் காலை 6 மணிக்கு திருப்பலி, சிலுவைபாதை, இரவு 7 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட கொடிமரம் அர்ச்சிப்பு, கொடியேற்றம் போன்றவை நடக்கிறது. பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமை தாங்குகிறார். கோட்டார் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல் மறையுரையாற்றுகிறார்.
தொடர்ந்து 4-ந் தேதி முதல் 9-ம் தேதி வரையுள்ள திருவிழா நாட்களில் திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.
மார்ச் 10-ந் தேதி காலை 6.45 மணிக்கு சிலுவை பாதை, இரவு 7 மணிக்கு திருப்பலி, 8.45 மணிக்கு நற்கருணை பவனி போன்றவை நடைபெறும். திருவிழாவின் 9-வது நாளான 11-ந் தேதி காலை 6 மணிக்கு தேவசகாயம் சுட்டு கொல்லப்பட்ட இடத்தில் திருப்பலியும், மாலையில் ஆராதனையும் நடக்கிறது. ஆராதனையில் தேவசகாயம்மவுண்ட் மறைவட்ட முதன்மை பணியாளர் பெர்பெச்சுவல் ஆன்டனி, முதன்மை அருட்பணியாளர் சாலமோன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து, இரவு 9.30 மணிக்கு வாணவேடிக்கையும், 10.30 மணிக்கு தேர்ப்பவனியும் நடைபெறும்.
திருவிழாவின் இறுதி நாளான 12-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை, 5 மணிக்கு திருவிழா திருப்பலி ஆகியவை நடைபெறும். இதில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்குகிறார். காலை 7 மணிக்கு மலையாள திருப்பலியும், 8.30 மணிக்கு விருந்தினர் திருப்பலியும், 10.30 மணிக்கு நேர்ச்சை திருப்பலியும் நடக்கிறது.
மாலை 3.30 மணிக்கு தேர்ப்பவனியும், இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 10 மணிக்கு மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை வரலாற்று நாடகம் ஆகியவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்டீபன், உதவி பங்குதந்தை ரவிகாட்சன் கென்னடி, அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவை மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.