ஆன்மிகம்

மரியாள் (இயேசுவின் தாய்)

Published On 2017-02-20 15:25 IST   |   Update On 2017-02-20 15:25:00 IST
மரியா அல்லது மரியாள் புதிய ஏற்பாட்டின்படி இயேசு கிறிஸ்துவின் தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள்.
மரியா அல்லது மரியாள் புதிய ஏற்பாட்டின்படி இயேசு கிறிஸ்துவின் தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள். புனித யோசேப்பு இவரது கணவராவார். மரியாள் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி மரியாளியல் எனப்படுகிறது.

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் மரியாவை கன்னி எனக்குறிக்கின்றன. கிறித்தவ மரபுப்படி மரியா இயேசுவை தூய ஆவியினால் தன் கன்னித்தன்மை கெடாமலேயே கருதாங்கினார். இது எல்லா கிறித்தவ பிரிவுகளின் நம்பிக்கைகளின் அடிப்பை என ஏற்கப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு முன்பே மரியா புனித யோசேப்புக்கு மண ஒப்பந்தமாகியிருந்தார்.

மரியாளின் பிறப்பை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழித்திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை என்பன செப்டம்பர் 8ல் கொண்டாடுகின்றன.

Similar News