ஆன்மிகம்
நாகர்கோவில் மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய அர்ச்சிப்பு விழா
நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய கீழ்தளம் அர்ச்சிப்பு விழா நடைபெற்றது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக இருந்த பழமையான ஆலயம் மாற்றப்பட்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது ஆலயத்தின் கீழ் தள பகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் அர்ச்சிப்பு விழா நடந்தது. விழாவில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு கீழ் தளத்தை அர்ச்சிப்பு செய்து திறந்து வைத்தார்.
பின்னர் ஆயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது.
முன்னதாக ஆலய வளாகத்தின் அருகில் உள்ள கல்லறை தோட்ட சிற்றாலயத்தில் இருந்து கொடிபவனி நடைபெற்றது. தொடர்ந்து அன்பின் விருந்து நடந்தது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரியதாஸ், அருட்பணியாளர் அந்தோணி பிச்சை, பங்கு அருட்பணி பேரவையினர், ஆலய திருப்பணி குழுவினர், பங்குமக்கள் செய்து இருந்தனர்.
பின்னர் ஆயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது.
முன்னதாக ஆலய வளாகத்தின் அருகில் உள்ள கல்லறை தோட்ட சிற்றாலயத்தில் இருந்து கொடிபவனி நடைபெற்றது. தொடர்ந்து அன்பின் விருந்து நடந்தது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரியதாஸ், அருட்பணியாளர் அந்தோணி பிச்சை, பங்கு அருட்பணி பேரவையினர், ஆலய திருப்பணி குழுவினர், பங்குமக்கள் செய்து இருந்தனர்.