ஆன்மிகம்
வில்லியனூரில் புனித லூர்து அன்னை புதிய ஆலயம் திறப்பு விழா
புதுவை வில்லியனூரில் உள்ள புனித லூர்து அன்னை புதிய ஆலயம் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது.
புதுவை வில்லியனூரில் உள்ள புனித லூர்து அன்னை ஆலய (மாதா கோவில்) வளாகத்தில் ரூ.6 கோடி செலவில் புதிய ஆலயம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு கட்டுமானபணிகள் தொடங்கின.
இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய ஆலய திறப்பு விழா நேற்று முன் தினம் இரவு நடந்தது. புதுவை-கடலூர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமை தாங்கி புதிய ஆலயத்தை திறந்து வைத்தார்.
முன்னாள் பேராயர் மைக்கேல் அகஸ்டின் முன்னிலைவகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டனர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ரிச்சர்டு செய்திருந்தார்.
இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய ஆலய திறப்பு விழா நேற்று முன் தினம் இரவு நடந்தது. புதுவை-கடலூர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமை தாங்கி புதிய ஆலயத்தை திறந்து வைத்தார்.
முன்னாள் பேராயர் மைக்கேல் அகஸ்டின் முன்னிலைவகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டனர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ரிச்சர்டு செய்திருந்தார்.