ஆன்மிகம்
கும்பகோணம் புனித பெரிய நாயகி அன்னை ஆலய தோ்பவனி
கும்பகோணம் பெரும்பாண்டி மாதாகோவில் தெருவில் உள்ள புனித பெரியயநாயகி அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது.
கும்பகோணம் பெரும்பாண்டி மாதாகோவில் தெருவில் உள்ள புனித பெரியயநாயகி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழா நாட்களில் கூட்டு ஜெபமாலை திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது. இதில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியநாயகி அன்னை பவனி வந்தார்.
தோ்பவனி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனா். தோ்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய இடங்களுக்கு சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. நேற்று மாலை குவனெல்லா பங்குத்தந்தை ஜான்போஸ்கோ, உதவி பங்குத்தந்தை வின்சென்ட் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை குவனெல்லா சபை பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை, பங்கு பேரவை உறுப்பினா்கள், அன்னை தெரசா இளைஞா மன்றத்தினா் செய்திருந்தனா்.
தோ்பவனி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனா். தோ்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய இடங்களுக்கு சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. நேற்று மாலை குவனெல்லா பங்குத்தந்தை ஜான்போஸ்கோ, உதவி பங்குத்தந்தை வின்சென்ட் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை குவனெல்லா சபை பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை, பங்கு பேரவை உறுப்பினா்கள், அன்னை தெரசா இளைஞா மன்றத்தினா் செய்திருந்தனா்.