ஆன்மிகம்

புனித வனத்தவசி அந்தோணியார் ஆலய தேர்பவனி

Published On 2017-01-23 11:38 IST   |   Update On 2017-01-23 11:38:00 IST
திருச்சி கருமண்டபத்தில் புனித வனத்தவசி அந்தோணியார் ஆலய தேர்பவனி நேற்று மாலை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
திருச்சி கருமண்டபத்தில் புனித வனத்தவசி அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் மாலை நேரங்களில் திருப்பலியும், மறையுரையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று மாலை நடந்தது. முன்னதாக காலை திருப்பலி நடந்தது.

பின்னர் மாலையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித வனத்தவசி அந்தோணியார் எழுந்தருள தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Similar News