ஆன்மிகம்

ஜென்மராக்கினி ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2016-11-30 10:28 IST   |   Update On 2016-11-30 10:28:00 IST
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தூய ஜென்மராக்கினி ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தூய ஜென்மராக்கினி ஆலய பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மாலை 5.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் லூயிஸ் அடிகளார் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஆலய பங்குத்தந்தை அல்போன்ஸ் சந்தானம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் காலை 5.15 மணிக்கு திருப்பலியும், மாலையில் 6.15 மணிக்கு ஜெபமாலையும், திருப்பலியும், சிறிய தேர்பவனியும், நற்கருணை ஆசீரும் நடைபெறும்.

விழாவில் வருகிற 8-ந் தேதி காலை 6.30 மணிக்கு புதுச்சேரி கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறும். அன்று மாலை 5.15 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடைபெறும். வருகிற 9-ந் தேதி காலை 6.15 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Similar News