ஆன்மிகம்
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத் தேர் திருவிழா
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத் தேர் திருவிழா 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஈரோடு நகரில் உள்ள புனித அமல அன்னை ஆலயம் புகழ் பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா சிறப்பாக நடக்கும்.
அதே போல் இந்தாண்டு தேர்த்திருவிழா வரும் 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 8 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. ஈரோடு மறை மாவட்ட அதிபரும் ரெயில்வே காலனி பங்கு தந்தையுமான ஆரோக்கிய ராஜ் ஸ்டீபன் தலைமை தாங்குகிறார்.
8-ந் தேதி அமல அன்னை பெருவிழாவையொட்டி விஜய் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி மறைவுரை நடக்கிறது. 9-ந் தேதி பங்கு தந்தை அலெக்சிசுவும் 10-ந் தேதி ஆல்பர்ட் புஷ்பராஜிம் திருப்பலி நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
வரும் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டு படற்திருப்பலி கோவை தூய வளனார் இளங்குரு மடம் அதிபர் ஆரோக்கியசாமி தலைமையில் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேர் பவனி நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அதே போல் இந்தாண்டு தேர்த்திருவிழா வரும் 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 8 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. ஈரோடு மறை மாவட்ட அதிபரும் ரெயில்வே காலனி பங்கு தந்தையுமான ஆரோக்கிய ராஜ் ஸ்டீபன் தலைமை தாங்குகிறார்.
8-ந் தேதி அமல அன்னை பெருவிழாவையொட்டி விஜய் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி மறைவுரை நடக்கிறது. 9-ந் தேதி பங்கு தந்தை அலெக்சிசுவும் 10-ந் தேதி ஆல்பர்ட் புஷ்பராஜிம் திருப்பலி நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
வரும் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டு படற்திருப்பலி கோவை தூய வளனார் இளங்குரு மடம் அதிபர் ஆரோக்கியசாமி தலைமையில் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேர் பவனி நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.