ஆன்மிகம்

அழகப்பபுரம் புனித சவேரியார் சிற்றாலய திருவிழா

Published On 2016-11-29 11:16 IST   |   Update On 2016-11-29 11:16:00 IST
அழகப்பபுரம் சவேரியார் நகர் புனித சவேரியார் சிற்றாலயத்தில் 10 நாட்கள் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
அழகப்பபுரம் சவேரியார் நகர் புனித சவேரியார் சிற்றாலயத்தில் 10 நாட்கள் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு மன்றாட்டு மாலை, திருப்பலி ஆகியவை நடக்கிறது.

இதில் அழகப்பபுரம் பள்ளிகள், பக்தசபையினர், பங்கு பேரவையினர், சவேரியார் நகர் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். வருகிற 4-ந்தேதி மாலை ஆராதனை, 5-ந்தேதி காலை திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை அழகப்பபுரம் பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ், உதவி பங்குத்தந்தை சூசைமணி ஆகியோர் செய்துள்ளனர்.

Similar News