ஆன்மிகம்
வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் வருகை குறைந்தது
ரூ.500, 1000 நோட்டு பிரச்சினை காரணமாக நாகை மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது.
நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற மாதா பேராலயம் உள்ளது. இதே போல் நாகூர் தர்காவும் சிறப்பு பெற்றது.
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் பறவைகள் மற்றும் வன விலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சுற்றுலா தலங்களுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். குறிப்பாக வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள், வெளி நாட்டினர் வருவார்கள்.
சமீபத்தில் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து இருப்பதால் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைய தொடங்கியது. இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள வேளாங்கண்ணி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.கடற்கரையிலும் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்த பின்னர் தான் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
தஞ்சை பெரிய கோவில், அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது. பெரிய கோவிலுக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் பறவைகள் மற்றும் வன விலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சுற்றுலா தலங்களுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். குறிப்பாக வேளாங்கண்ணி மாதா பேராலயத்துக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள், வெளி நாட்டினர் வருவார்கள்.
சமீபத்தில் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து இருப்பதால் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைய தொடங்கியது. இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள வேளாங்கண்ணி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.கடற்கரையிலும் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது. இதனால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்த பின்னர் தான் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
தஞ்சை பெரிய கோவில், அரண்மனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது. பெரிய கோவிலுக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.