ஆன்மிகம்

கல்யாண் தாபோர் அன்னை ஆலய ஆண்டு திருவிழா

Published On 2016-10-21 08:47 IST   |   Update On 2016-10-21 08:47:00 IST
கல்யாண் தாபோர் அன்னை ஆலய ஆண்டு திருவிழா நாளை(சனிக்கிழமை) நடக்கிறது.
தானே மாவட்டம், கல்யாண் மேற்கு தாபோர் அன்னை ஆலயத்தின் 15-வது ஆண்டு திருவிழா நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு தியானம் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடக்கின்றன.

இதில் ஆயர் துரைராஜ், அருட்பணியாளர்கள் அமல், மைக்கேல், பெனடிக்ட், ஜான்பால் மற்றும் மும்பை மறைமாவட்ட தமிழ் பணிக்குருக்கள், தாபோர் குழுவினர் கலந்துகொண்டு வழி நடத்துகின்றனர். அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அன்னையின் தேர்பவனி நடக்கிறது.

Similar News