கிரிக்கெட்

ஸ்ரேயாஸ் அய்யர்

ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் ஹூடா அபாரம்... 188 ரன்கள் குவித்தது இந்தியா

Published On 2022-08-07 16:36 GMT   |   Update On 2022-08-07 19:27 GMT
  • அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 40 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.
  • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-1 என ஏற்கனவே கைப்பற்றி உள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் இன்று லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றனர். ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தினார்.

துவக்க வீரர் இஷான் கிஷன் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் - தீபக் ஹூடா அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.

அணியின் ஸ்கோர் 114 ஆக இருக்கும்போது இந்த ஜோடியை வால்ஷ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் தீபக் ஹூடா ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38 ரன்கள் விளாசினார். இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 64 ரன்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரி, 2 சிக்சரும் அடங்கும்.

சஞ்சு சாம்சன் 15 ரன்கள், தினேஷ் கார்த்திக் 12 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள், அக்சர் பட்டேல் 9 ரன்கள், அவேஷ் கான் 1 ரன் (நாட் அவுட்) எடுக்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-1 என ஏற்கனவே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News