கிரிக்கெட்

ரஞ்சன் பால், ஜெகதீசன்

ரஞ்சன் பால், சஞ்சய் யாதவ் அதிரடி.. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 217 ரன்கள் குவிப்பு

Published On 2023-06-13 15:39 GMT   |   Update On 2023-06-14 00:45 GMT
  • ரஞ்சன் பால் 55 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 88 ரன்கள் குவித்தார்.
  • 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி களமிறங்குகிறது.

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2-வது லீக் ஆட்டம் கோவையில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.

துவக்க வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் அதிரடியாக ஆடினார். சேலம் பந்துவீச்சாளர்களை திணறடித்த அவர் பவுண்டரிகளாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 30 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், 55 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 88 ரன்கள் குவித்தார். மறுமுனையில் கேப்டன் ஜெகதீசன் 35 ரன்கள், பாபா அபராஜித் 29 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

ஹரிஷ் குமார் 8 ரன்களிலும், ராஜகோபால் சதீஷ் ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர். சஞ்சய் யாதவ் 31 ரன்களுடனும், உதிரசாமி சசிதேவ் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

சேலம் ஸ்பார்டன்ஸ் தரப்பில் சன்னி சந்து 2 விக்கெட் கைப்பற்றினார். அபிஷேக் தன்வார், மோகித் ஹரிஹரன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News