கிரிக்கெட்
ப்ளோரிடாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜாலி ட்ரிப்- புகைப்படங்கள் வைரல்
- இந்த மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேருக்கு நேர் நான்கு முறை சந்தித்துள்ளன.
- ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் உள்பட குழு உறுப்பினர்கள் கடற்கரையில் கிட்டத்தட்ட 3 மணிநேரம் செலவிட்டனர்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கிடையேயான 4-வது டி20 போட்டி புளோரிடாவில் நாளை நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேருக்கு நேர் நான்கு முறை சந்தித்துள்ளன. இதில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
4-வது டி20 போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் புளோரிடாவில் உள்ள மியாமி கடற்கரையை சுற்றிப் பார்க்க முடிவு செய்தனர். அதன்படி இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் உள்பட குழு உறுப்பினர்கள் கடற்கரையில் கிட்டத்தட்ட 3 மணிநேரம் செலவிட்டனர்.
அந்த புகைப்படத்தை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.