கிரிக்கெட்

4-ம் நாள் உணவு இடைவேளை- அரை சதத்துடன் வெளியேறிய ரிஷப் பண்ட், புஜாரா

Published On 2022-07-04 12:01 GMT   |   Update On 2022-07-04 12:01 GMT
  • இந்திய அணி 361 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
  • ஜடேஜா 17 ரன்னிலும் முகமது சமி 13 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடியது. பேர்ஸ்டோவின் சதத்தால் இங்கிலாந்து அணி 284 ரன்கள் எடுத்தது.

2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா-ரிஷப் பண்ட் அரை சதம் அடித்தனர்.

புஜாரா 66, ஷ்ரேயாஸ் ஐயர் 19, ரிஷப் பண்ட் 57, சர்துல் தாகூர் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜடேஜா-முகமது சமி ஜோடி நிதானமாக ஆடினர். 4-வது நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி 361 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஜடேஜா 17 ரன்னிலும் முகமது சமி 13 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News