கிரிக்கெட்

ராபின் உத்தப்பா

அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் ராபின் உத்தப்பா

Published On 2022-09-14 18:55 GMT   |   Update On 2022-09-14 18:55 GMT
  • எனது நாடு, எனது மாநிலத்திற்காக விளையாடியது மிகப்பெரிய கவுரவம்.
  • சிறப்பான நினைவுகளை கொடுத்த சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு நன்றி.

பெங்களூரு:

ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த ராபின் உத்தப்பா ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராபின் உத்தப்பா ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

நான் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகின்றன, இது ஏற்ற தாழ்வுகள் நிறைந்த அற்புதமான பயணம். அது நிறைவாகவும், சுவாரஸ்யமாகவும், என்னை அனுமதித்துள்ளது. எனது நாட்டையும், எனது மாநிலமான கர்நாடகாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவது எனது மிகப்பெரிய கவுரவமாகும்.

இருப்பினும், அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும், மேலும் நன்றியுள்ள இதயத்துடன், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது குடும்பத்துடன் குறிப்பிடத்தக்க நேரத்தை செலவிடுவேன், அதே நேரத்தில் ஒரு புதிய பயணத்தை எதிர் நோக்கி உள்ளேன்.

எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவு மற்றும் ஊக்கம் அளித்த பிசிசிஐ தலைவர், செயலாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான நினைவுகளை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராபின் உத்தப்பா இந்திய அணிக்காக 60 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 13 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4952 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் அடித்த 9வது இந்திய வீரராக இருந்து வந்தார்.

Tags:    

Similar News