கிரிக்கெட்

சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் ஐ.பி.எல். கோப்பைக்கு சிறப்பு பூஜை செய்த சிஎஸ்கே

Published On 2023-05-30 20:06 GMT   |   Update On 2023-05-30 20:06 GMT
  • குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
  • சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு பூஜை செய்யப்பட்டது.

சென்னை:

16-வது ஐ.பி.எல். சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

சென்னை அணியின் வெற்றிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து வெற்றிக்கோப்பையுடன் சென்னை அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் நேற்று மதியம் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், சிஇஓ காசி விஸ்வநாதன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களோடு ஐ.பி.எல். வெற்றிக்கோப்பையும் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு சி.எஸ்.கே அணி வென்ற ஐ.பி.எல். கோப்பை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

Tags:    

Similar News