கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு

Published On 2022-11-25 01:08 GMT   |   Update On 2022-11-25 01:12 GMT
  • நியூசிலாந்துடனான டி20 தொடரை 1-0 என இந்தியா கைப்பற்றியது.
  • இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.

ஆக்லாந்து:

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று பகல்-இரவாக நடக்கிறது. இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் இன்றைய போட்டியில் அறிமுகமாகின்றனர்.

தவான் தலைமையிலான இந்திய அணி கடந்த மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News