கிரிக்கெட்

முகமது நபி

டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலி - ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகல்

Published On 2022-11-04 22:15 GMT   |   Update On 2022-11-04 22:15 GMT
  • உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
  • இதையடுத்து ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து நபி விலகியுள்ளார்.

அடிலெய்டு:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் 3 தோல்வி அடைந்துள்ளது. அந்த அணியின் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால் அந்த அணி புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நிறைவு செய்துள்ளது. இதனால் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகியுள்ளார்.

இதுதொடர்பாக முகமது நபி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஆப்கானிஸ்தான் அணியின் டி20 உலக கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. போட்டிகளின் முடிவுகளால் ரசிகர்களை போலவே நாங்களும் விரக்தி அடைந்துள்ளோம்.

கடந்த சில சுற்றுப்பயணங்களில் அணி நிர்வாகம், தேர்வுக் குழு மற்றும் எனது முடிவுகளில் வேறுபாடு இருந்துள்ளது. இது அணியின் சமநிலையில் தாக்கங்களை ஏற்படுத்தியது. எனவே, உடனடியாக கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன். அணி நிர்வாகம் விரும்பினால் ஒரு வீரராக தொடர்ந்து விளையாட தயாராக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News