கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024 - சூர்ய குமார் யாதவ் அதிரடியால் 192 ரன்களை குவித்தது மும்பை

Published On 2024-04-18 15:58 GMT   |   Update On 2024-04-18 15:58 GMT
  • சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
  • ரபாடா மற்றும் சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கை துவங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவருடன் விளையாடிய திலக் வர்மா நிதானமாக ஆடினர். போட்டி முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை சார்பில் திலக் வர்மா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பஞ்சாப் சார்பில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் சாம் கர்ரன் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

Tags:    

Similar News