கிரிக்கெட்

ஐ.பி.எல். 2024 - அஷுதோஷ் போராட்டம் வீண்.. போராடி தோற்றது பஞ்சாப்

Published On 2024-04-18 18:13 GMT   |   Update On 2024-04-18 18:13 GMT
  • அஷுதோஷ் ஷர்மா அதிரடியாக ஆடி 61 ரன்களை குவித்தார்.
  • பும்ரா மற்றும் கோட்சி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கை துவங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறஹ்கிய ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவருடன் விளையாடிய திலக் வர்மா நிதானமாக ஆடினர். போட்டி முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை சார்பில் முறையே ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான சாம் கர்ரன், பிரப்சிம்ரன் சிங் முறையே 6 மற்றும் 0 எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரோசோ மற்றும் லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஹர்பிரீத் சிங் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

இதன் காரணமாக பஞ்சாப் அணி துவக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய சஷான்க் சிங் சிறப்பாக ஆடி 25 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய அஷுதோஷ் ஷர்மா அதிரடியாக ஆடி 61 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய ஹர்பிரீத் சிறப்பாக ஆடினார்.

19.1 ஓவர்களில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை குவித்தது. இதன் மூலம் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை சார்பில் பும்ரா மற்றும் கோட்சி தலா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் மோத்வால் 2 விக்கெட்களையும், ஸ்ரேயஸ் கோபால் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

Tags:    

Similar News