லைவ் அப்டேட்ஸ்: நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- தரம்சாலாவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
தரம்சாலா:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் தர்மசாலாவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்குகிறது.
இந்திய அணியில் முகமது ஷமி, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெற வைத்தார் ஜடேஜா.
95 ரன்னில் விராட் கோலி அவுட் ஆகி சதத்தை தவற விட்டார்.
சூர்யகுமார் யாதவ் 2 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
கேஎல் ராகுலுக்கு கள நடுவர் அவுட் கொடுக்காத நிலையில் சாண்ட்னர் ரிவ்யூ மூலம் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.
ஷாட் பாலில் விக்கெட்டை இழந்த ஷ்ரேயாஸ் ஐய்யர். 33 ரன்னில் அவுட்.
பனி மூட்டம் மைதானத்தை சூழ்ந்ததால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டுள்ளது.
ரோகித்தை தொடர்ந்து கில் விக்கெட்டை வீழ்த்தினார் லாக்கி பெர்க்யூசன். கில் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடி வந்த ரோகித் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்சர் 4 பவுண்டரி அடங்கும்.
போல்ட் பந்து வீச்சில் ரோகித் அடித்த பந்து பவுலர் கையில் பட்டு ஸ்டெம்பில் பட்டது. அந்த ரன் அவுட்டில் இருந்து நல்ல வேளையாக கில் தப்பித்தார்.
ஹென்றி பந்து வீச்சில் இறங்கி வந்து சிக்சர் கணக்கை தொடங்கி வைத்தார் ரோகித்.