கிரிக்கெட்

4-வது டி20 போட்டி: இந்திய அணி தொடரை வெல்லுமா? வெஸ்ட் இண்டீசுடன் நாளை மோதல்

Published On 2022-08-05 07:37 GMT   |   Update On 2022-08-05 07:37 GMT
  • 20 ஓவர் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
  • ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் மோதி வருகின்றன.

முதல் மற்றும் 3-வது போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இதனால் 20 ஓவர் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது மற்றும் 5-வது போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் லாடர்ஹில்லில் நடக்கிறது.

4-வது போட்டி நாளை நடக்கிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப்சிங், அஸ்வின் உள்ளனர். ஆல்-ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யாவும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

பூரன் தலைமயிலான வெஸ்ட்இண்டீஸ் அணியில் பிரண்டன் கிங், மேயர்ஸ், போவெல், ஹெட்மர், ஹோல்டர், ஜோச், மெக்காய் உள்ளனர். அந்த அணி வெற்றி நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. தோல்வி அடைந்தால் தொடரை இழக்க வேண்டும் என்ப தால் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி போராடும்.

Tags:    

Similar News