சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்... இலங்கைக்கு 229 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
- 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது.
- சூர்யகுமார் யாதவ் 112 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ராஜ்கோட்:
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
துவக்க வீரர் இஷான் கிஷன் ஒரு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் ஷூப்மான் கில், ராகுல் திரிபாதி ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ராகுல் திரிபாதி 35 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஷூப்மான் கல்லுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
163 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்த ஜோடி பிரிந்தது. ஷூப்மான் கில் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஹர்திக் பாண்ட்யா (4), தீபக் ஹூடா (4) நிலைக்கவில்லை. மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த சூர்யகுமார் யாதவ் சதம் விளாசினார். அவர் 45 பந்துகளில் 6 பவுண்டரி 8 சிக்சர்களுடன் இந்த இலக்கை எட்டினார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 112 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் தில்சன் 2 விக்கெட் எடுத்தார். கசுன் ரஜிதா கருணாரத்னே, ஹசரங்கா டி சில்வா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்குகிறது.