கிரிக்கெட்

வங்காளதேசத்துடன் நாளை 3-வது போட்டி- இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

Published On 2022-12-09 07:43 GMT   |   Update On 2022-12-09 07:43 GMT
  • காயம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் விளையாடவில்லை.
  • பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் இணைந்து முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும்.

சிட்டாகாங்:

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே இழந்து விட்டது. முதல் ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 5 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோற்றது.

இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெற்று ஆறுதல் அளிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர். முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி வரை நெருங்கி வந்த வாய்ப்பை பறி கொடுத்தது. பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் இணைந்து முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும்.

காயம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் விளையாடவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்பார். தீபக்சாகர், குல்தீப் சென் ஆகியோரும் காயத்தால் விலகி உள்ளனர்.

முன்னாள் கேப்டன் விராட் கோலி , ஷிகர் தவான் ஆகியோர் வங்காளதேச தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர்கள் ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தவானுடன இணைந்து ராகுல் தொடக்க வீரராக ஆடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்திய பந்துவீச்சாளர்களும் நெருக்கடியில் உள்ளனர்.

வங்காளதேசம் 3-வது போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்யும் ஆர்வத்துடன் உள்ளது.

சொந்த மண்ணில் அந்த அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மெகிதி ஹசன் மிராஸ், சகீப்-அல்-ஹசன் , கேப்டன் லிட்டன் தாஸ் , மகமதுல்லா ஆகி யோர் நல்ல நிலையில் உள்ளனர்.

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

Similar News