தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு
- தென் ஆப்பிரிக்கா அணியில் கேசவ் மகராஜ் இடம் பெறவில்லை.
- இந்திய அணி எந்த மாற்றம் இல்லாமல் களம் இறங்குகிறது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் 2-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இந்த தொடரை வெல்ல போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி இதுவாகும். இந்திய அணி எந்த மாற்றம் இல்லாமல் களம் இறங்குகிறது.
தென் ஆப்பிரிக்காவில் கேசவ் மகராஜ் இடம் பெறவில்லை. அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் செயல்படுகிறார்.
இந்திய அணி:-
ஷிகர் தவான், ஷுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அவேஷ் கான்
தென் ஆப்பிரிக்கா அணி:-
குயின்டன் டி காக், ஜான்மேன் மலான், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே