கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல். மினி ஏலம் - பிராவோ உள்பட 8 வீரர்களை விடுவித்த சி.எஸ்.கே.

Published On 2022-11-15 13:25 GMT   |   Update On 2022-11-15 13:25 GMT
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியல் வெளியானது.
  • சென்னை அணி கேப்டனாக எம்.எஸ்.தோனி செயல்படுவார். ஜடேஜாவை அந்த அணி தக்கவைத்தது.

சென்னை:

டிசம்பர் 23ம் தேதி ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.

இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-க்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பிராவோ, தமிழக வீரர் ஜெகதீசன், ராபின் உத்தப்பா (ஓய்வு), கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், பகத் வர்மா, கே.எஸ்.ஆசிப் உள்ளிட்ட 9 வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி செயல்படுவார். அந்த அணி ரவீந்திர ஜடேஜாவை தக்கவைத்துள்ளது.

Tags:    

Similar News