கிரிக்கெட்

மெல்போர்ன் டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு 317 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா

Published On 2023-12-29 01:29 GMT   |   Update On 2023-12-29 01:29 GMT
  • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 54 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
  • 2-வது இன்னிங்சில் 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையே மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.

பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிறகு 187 ரன்கள் எடுத்திருந்தது. அலேக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய அலேக்ஸ் கோரி 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 316 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் 8 ரன்கள் எடுப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது. 7 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்துள்ளது.

Tags:    

Similar News